தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே வினாத்தாள் தயாரிக்கப்பட்டு பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பாடத்திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின்பு கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 6 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்றும் மாதம் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மற்ற வகுப்புகளுக்கு பாட வாரியாக கால அட்டவணை வெளியாகியுள்ளது.
WhatsApp பயனர்களுக்கு முக்கிய தகவல் – ஈசியா மெசேஜ் அனுப்ப புதிய அம்சம்!
தேர்வுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத் தேர்வு பாடத்திட்டங்கள் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மாணவர்களின் பாடசுமையை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. முன்னுரிமை பாடப் பகுதியே நடப்பாண்டு தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பதே சிரமமாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆதார் கார்டு போலியானதா? உண்மையானதா? கண்டறிவதற்கான வழிமுறைகள் இதோ!
அதனால் பாடத்திட்டத்தை மேலும் குறைக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படாது அதனால் மாணவர்கள் பயப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.