மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை மற்றும் 3% DA தொகையை பெற இருப்பதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 1.5 ஆண்டுகள் அதாவது 18 மாத காலமாக செலுத்தாமல் உள்ள அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை ஒரே தவணையில் ரூ. 2 லட்சமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2020 ஜனவரி முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அகவிலைப்படி தொகை 3 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு அட்டவணை முழு விபரங்களுடன்!

இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான ஊடக அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும். இதில் DA நிலுவைத் தொகையும் அடங்கும். இது தவிர அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒருமுறையில் கொடுத்து தீர்க்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கிடையில் ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, கவுன்சில் அரசிடம் கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

மேலும், இது குறித்து அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு DA தொகை ஒரே தவணையில் கொடுக்கப்பட்டால், லெவல்-1 ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும், நிலை-13 அல்லது நிலை-14 ஊழியர்களின் DA நிலுவை ரூ.1,44,200 மற்றும் 2,18,200 ஆக இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் மத்திய அமைச்சரவை இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுடன் மத்திய அரசு ஊழியர்களும் DA சலுகைகளை அனுபவிப்பார்கள் என்று தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!