தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு அட்டவணை முழு விபரங்களுடன்!
தமிழகத்தில் இந்தாண்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கண்டிப்பாக பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு எப்போது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
பொது தேர்வு
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்துமே கற்பிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் எதுவுமே நடத்தப்படவில்லை. பொது தேர்வுகள் நடத்தாததால் 11 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
11 ஆம் வகுப்பு சேர்க்கை நேரடியாகவே நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் கொரோனாவின் பரவல் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கண்டிப்பாக இந்தாண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி – உணவுத்துறை முக்கிய அறிவிப்பு!
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி பொது தேர்வு தொடங்கி மே 13 ஆம் தேதி முடிவடைகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மாணவர்களுக்கு மே 30 ஆம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மே 2 முதல் மே 4 வரை நடைபெறும். தேர்வு முடிந்து ஜூன் 13 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.