நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் அண்டை நாடான சீனாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் மீண்டும் அந்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளும் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். அத்துடன் வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது.
தமிழகத்தில் தைப்பூசம் அரசு விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
மேலும் கொரோனா வைரஸை விட உருமாற்றம் அடைந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்திய நாட்டில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. ஆனால் அண்டை நாடான சீனாவின் ஹாங்காங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்துடன் ஒரு நாள் பாதிப்பு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சீனாவின் மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் வருவதால் மருத்துவர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி – உணவுத்துறை முக்கிய அறிவிப்பு!
அதனால் ஹாங்காங்கில் மீண்டும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் வருகை புரிகிறார்கள். இதனால் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முழு ஊரடங்கு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக ஹாங்காங் சுகாதாரத்துறை அமைச்சர் சோபியா சான் தகவல் தெரிவித்துள்ளார்.