தமிழகத்தில் தைப்பூசம் அரசு விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் ‘தைப்பூச விழா’ அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தினத்தை வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பொது விடுமுறை
பொதுவாக தமிழக அரசுத்துறையில் உள்ள ஊழியர்களுக்கு அளிக்கப்படும் மத விடுப்பு நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் என்ற வரைமுறைக்குள் வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் இந்த வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களை, வருடத்திற்கு மூன்று நாட்கள் என்ற அளவில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இப்போது 2022ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு 33 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி – உணவுத்துறை முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது தைப்பூச விழாவை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளதால், அந்த தினத்தை வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையின் படி, ‘மாநில அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பண்டிகை உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் ‘வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களில்’ மூன்று விடுப்புகளை எடுத்துக் கொள்ள உரிமை உண்டு.
TN TRB அரசு ஆசிரியர் பணிக்கு நியமன தேர்வுகள் ரத்து – முதல்வரிடம் கோரிக்கை!
இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை அரசு ஊழியர்கள் எழுத்துப்பூர்வமாக முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இப்போது 2021 ஆம் ஆண்டு முதல், பேச்சுவார்த்தைக்கு ஏற்ற கருவிகள் சட்டம், 1881ன் கீழ், ‘தைப்பூசம்’ பண்டிகையை பொது விடுமுறை நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தைப்பூசத் திருவிழாவின் பெயரை வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் இருந்து நீக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.