மாநிலத்தின் இந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் அனைத்து இஸ்லாமியர்களால் கடந்த 3ம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஆனால் ராஜஸ்தானில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் கலவரத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை
இந்தியாவில் ரம்ஜான் பண்டிகையை கடந்த 3ம் தேதி அன்று அனைத்து இஸ்லாமியர்களும் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்நன்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பெரிய திடலில் அல்லது மசூதியில் ஒன்றாக தொழுவார்கள். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடிய நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாராத்பூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Exams Daily Mobile App Download
அத்துடன் இரு சமூகத்தினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக பொதுமக்களும், குழந்தைகளும் பாதிப்படைந்தனர். இதையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதனால் கலவரம் சற்று குறைந்துள்ளது. மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க பல்லாயிரக்கணக்கான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பாராத்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார்கள் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.
விஜே சித்ரா பற்றி தவறாக பேசி வரும் ரேகா நாயர் – கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்! உண்மை நிலவரம் என்ன?
மேலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் சில வீடுகளில் கலவரத்திற்கு பயன்படுத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான காலி பாட்டில்கள் மற்றும் கற்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி பாராத்பூர் மாவட்டம் முழுவதும் 144 தடையை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளிவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.