விஜே சித்ரா பற்றி தவறாக பேசி வரும் ரேகா நாயர் – கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்! உண்மை நிலவரம் என்ன?

0
விஜே சித்ரா பற்றி தவறாக பேசி வரும் ரேகா நாயர் - கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்! உண்மை நிலவரம் என்ன?
விஜே சித்ரா பற்றி தவறாக பேசி வரும் ரேகா நாயர் - கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்! உண்மை நிலவரம் என்ன?
விஜே சித்ரா பற்றி தவறாக பேசி வரும் ரேகா நாயர் – கடும் கொந்தளிப்பில் ரசிகர்கள்! உண்மை நிலவரம் என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அதில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். முல்லை கதாபாத்திரத்தின் மூலம் பல ரசிகர் பட்டாளம் சித்ராவிற்கு உருவானது. அவர் இறந்து ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் இவரை பற்றி, ஒரு நடிகை தவறுதலாக பேட்டி அளித்துள்ளார். இதை கண்டு சித்ராவின் ரசிகர்கள் அதிக கோபத்தில் உள்ளனர்.

கோபத்தில் ரசிகர்கள்:

சின்னத்திரையில் ஆங்கராக தனது வாழ்க்கையை துவக்கிய சித்ரா, நடனம், மாடலிங் அதன் பின்னர் சின்னத்திரையில் சில சீரியல்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடிக்க துவங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். இதையடுத்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் சீரியல் நடிகையாக வலம் வந்தார். சித்ரா என்று சொல்வதை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்று சொன்னால் சின்னத்திரை ரசிகர்கள் அனைவருக்கும் தெரியுமளவிற்கு முல்லை கேரக்டராகவே வாழ்ந்தவர் விஜே சித்ரா.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9 அன்று சென்னை பூந்தமல்லி அருகே தனியார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் விஜே சித்ரா. சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஜே. சித்ராவின் திடீர் மறைவால் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சித்ரா மரணம் தொடர்பான புகாரில் அவர் பதிவுத்திருமணம் செய்து கொண்டிருந்த ஹேம்நாத்திடமும் விசாரணை நடைபெற்றது. இது தற்கொலை இல்லை கொலை என்று சித்ராவின் பெற்றோரும், நெருங்கிய தோழிகளும் தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download

சித்ரா வழக்கு தொடர்பாக அவரின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். சித்ரா இறந்து தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது சித்ராவை பற்றி, மோசமாக நடிகை ரேகா நாயர் ஒரு பேட்டியில் பேசி உள்ளார். இதை கண்டு ரசிகர்கள் கொந்தளித்து போய் உள்ளனர். அவர் அளித்த பேட்டி, சித்ரா நல்லவ இல்லை, அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தாங்க, அதிகமாக குடிப்பாள், வீட்டில் பாக்கெட் நிறைய ஆணுறை இருந்தது என்று ரேகா நாயர் தெரிவித்தார்.

தனது கணவரின் பிறந்தநாளுக்கு புது பைக் பரிசளித்த விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

கடந்த ஒன்றரை வருடம் சும்மா இருந்துவிட்டு, தற்போது ரேகா நாயர் சித்ராவின் கேரக்டரை கேவலமாக பேசுவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ரேகா நாயர் உங்கள் பேச்சை நிறுத்தி கொள்ளுங்கள், இறந்த ஒருவருக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பது நல்லது இல்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!