கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

0
கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!
கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!
கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

கள்ளக்குறிச்சி கலவரம் காரணமாக கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

அமைச்சர் பேட்டி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார் பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி என் ஸ்ரீதர் அறிவித்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை அருகே உள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமா என ஆலோசனை நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு ரிசல்ட்டில் குளறுபடி? ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

மேலும் ஜனாதிபதில் தேர்தலில் வாக்களித்து விட்டு இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். மேலும் மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என கூறினார். இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!