தமிழக அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - முக்கிய உத்தரவு!தமிழக அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – முக்கிய உத்தரவு!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை கடந்த மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் இந்த பணியிடங்கள் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இருந்தாலும் ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டார்.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடங்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறைகேடான வழிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில் தற்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் இருக்கக்கூடிய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகக்குழு சேர்ந்து ஆசிரியர் நியமனத்திற்கான வேலைகளை செய்து வருகிறார்கள்.

TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 16 & 17 திருப்புதல் தேர்வு!

இனி பணியிடங்களுக்கு அனைத்து கல்வி மாவட்டங்களிலும் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் வந்தாலும் இதுவரை தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்கள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி , தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வருகின்ற ஜூலை 15 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் தேர்வானவர்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிற ஜூலை 18 ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) ஒப்புதல் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20 ஆம் தேதி பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!