மத்திய அரசின் 11வது தவணை கிசான் நிதியுதவி – முக்கிய அறிவிப்பு!

0
மத்திய அரசின் 11வது தவணை கிசான் நிதியுதவி - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் 11வது தவணை கிசான் நிதியுதவி - முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் 11வது தவணை கிசான் நிதியுதவி – முக்கிய அறிவிப்பு!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் கிஷான் நிதியுதவி திட்டத்தின் 11வது தவணைப் பணம் இன்னும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால் அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

கிசான் நிதியுதவி

நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைப்பணம் இப்போது 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கிசான் சம்மன் நிதியின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 31 அன்று வெளியிட்டார். இதன் மூலம் விவசாயிகளின் கணக்கில் சுமார் ரூ.21,000 கோடி நிதியுதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது பிரதமர் கிசான் சம்மன் நிதியின் பயனாளியாக இருந்து, அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவில்லை என்றால் இதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

தமிழக அரசு பேருந்துகளில் இனி இ-டிக்கெட், GPay இல் கட்டணம் – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

அந்த வகையில் முதலில் நீங்கள் PM Kisan www.pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். இதில் ஃபார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்ஷன் தோன்றும். அதை கிளிக் செய்து, பெனிஃபிட் லெவல் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு கெட் டேட்டா என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் தவணையில் உள்ள பணத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். இப்போது நிதிப்பணம் கணக்கிற்கு மாற்றப்படவில்லை என்றால், கட்டணமில்லா உதவி மையத்தின் உதவியை அழைத்து புகார்களை தெரிவிக்கலாம்.

ஹெல்ப்லைன் எண்:

PM Kisan Yojana இலவச எண்– 011-24300606

PM கிசான் ஹெல்ப்லைன் எண்: 155261

PM Kisan Yojana மின்னஞ்சல் ஐடி: [email protected]

eKYC கட்டாயம்: PM கிஷான் போர்ட்டலில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, கிசான் சம்மன் நிதியின் 11வது தவணையைப் பெற அனைத்து விவசாயிகளும் eKYC செய்ய வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த செயல்முறையை முடிக்கவில்லை என்றால், இந்தத் தொகை உங்கள் கணக்கில் வந்திருக்காது. எனவே அதைச் சரிபார்த்து, e-KYC முடிக்கப்பட வேண்டும்.

eKYC செய்த பிறகும் பணம் வரவில்லை என்றால்:

கிஷான் திட்டத்தின் கீழ் உங்கள் நிலை மற்றும் பயனாளிகள் பட்டியலையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். பயனாளிகள் பட்டியலை சரிபார்த்த பிறகும் உங்கள் பெயர் வரவில்லை என்றால், உங்கள் விண்ணப்பத்தில் பிழை இருக்க வாய்ப்பு உள்ளது. இதைச் சரிசெய்ய, போர்ட்டலிலும், அருகிலுள்ள க்ரிஷி சஹாயதா கேந்திராவிலும் சென்று திருத்தங்களை செய்யலாம்.

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் நிலையை சரிபார்க்க:
  • முதலில் PM Kisanன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in க்கு செல்லவும்.
  • இதில், முகப்பு பக்கத்தில் ஃபார்மர்ஸ் கார்னர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதன் உள்ளே நீங்கள் பயனாளிகள் பட்டியலை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது அதில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இதற்கு பிறகு அறிக்கையைப் பெறு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால், விண்ணப்பத்தில் சில முரண்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!