தமிழக அரசு பேருந்துகளில் இனி இ-டிக்கெட், GPay இல் கட்டணம் – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் இனி இ-டிக்கெட் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், G-pay, Phone Pay முதலான மொபைல் ஸ்கேனிங் முறையின் மூலமாக கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இ-டிக்கெட்:
உலகம் முழுவதும் ஆன்லைன் மூலமான வர்த்தக சேவைகள் தான் அதிகரித்து வருகிறது. சூப்பர் மார்க்கெட், ஹோட்டல், மால் என எங்கு சென்றாலும் G-pay, Phone Pay முதலான மொபைல் ஸ்கேனிங் முறையின் மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பெரிய பெரிய ஹோட்டல்கள், மால்களில் மட்டுமல்லாமல் சாதாரணமான ரோட்டு கடைகளில் கூட ஆன்லைன் மூலமான பணம் பரிமாற்று சேவைகள் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. பேருந்துகளில் மட்டுமே இந்த சேவைகள் இல்லாமல் இருந்தது.
தற்போது பேருந்துகளிலும் பேருந்து பயண டிக்கெட் முறைக்கு பதிலாக இ- டிக்கெட் வழங்கும் முறையை கொண்டு வர அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் கண்டிப்பாக பேருந்துகளில் இ- டிக்கெட் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ- டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டபிறகு பேருந்துகளில் G-pay, Phone Pay மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட சில முறைகளை பயன்படுத்தி பயணிகள் டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சில்லறைக்காக கண்டக்டரிடம் யாரும் திட்டுவாங்க தேவையே இல்லை. இதுமட்டுமல்லாமல், அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இனி பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரைக்கும் பழைய பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.