தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை உத்தரவு!
தமிழகத்தில் 10ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே 11ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதியன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வுகளை எழுதிய மாணவர்களில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இதில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதே போல 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இதிலும் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் 12ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஜூலை மாதம் 25ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் மறு தேர்வு துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்கள் 11ம் வகுப்பில் சேருவதற்கான பணிகள் துவங்கி இருக்கிறது.
சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் ஷாக்!
அந்த வகையில் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையின் போது மாணவர்களின் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். குறிப்பாக, மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களது மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி அவர்களுக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.