சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியல் மூலமாக பிரபலனவர் நடிகை ஸ்ரீநிதி. அவர் சிம்புவை திருமணம் செய்து வைக்கக்கோரி சில வாரங்களுக்கு முன் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் தற்போது ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி:
சமூக வலைத்தளங்களில் சில வாரங்களாக அதிகம் பேசப்பட்டு வந்தவர் நடிகை ஸ்ரீநிதி. ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை அவர் கவர்ந்தார். அவருடைய குறும்புத்தனமான குணத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனால் வலிமை படத்தை பார்த்துவிட்டு அவர் சொன்ன விமர்சனம் ஒன்று அவருடைய கேரக்டரை மொத்தமாக மாற்றி இருக்கிறது. அதற்கு மன்னிப்பு கேட்ட அவர் மன உளைச்சலில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது.
Exams Daily Mobile App Download
அதன் பின் வாரம் வாரம் புது சர்ச்சைக்குரிய கன்டென்ட்களுடன் அவர் களமிறங்கினார். சில வாரங்களுக்கு முன் சிம்புவை திருமணம் செய்ய வேண்டும் என அவருடைய வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியதாக வீடியோ வெளியிட்டார். பின் அவருடைய நெருங்கிய தோழியான நட்சத்திரா விஜே சித்ரா போன்ற நிலைமையில் இருப்பதாகவும் அவரை காப்பாற்ற வேண்டும் எனவும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டார். அதன் பின் அவரை வைத்து தனியார் யூடுயூப் சேனல் ஒன்று கன்டென்ட்களை உருவாக்கியது.
ஸ்ரீநிதி மன ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவரை பார்த்த போதும் அவை அனைத்தும் அப்பட்டமாக தெரிந்தது. இந்நிலையில் ஸ்ரீநிதியின் அம்மாவும் சில நாட்களாக அவருடைய நடவடிக்கை சரியில்லை என தெரிவித்தார். தற்போது ஸ்ரீநிதியை சென்னை புறநகர் புழல் பகுதியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு சின்ன மன நிம்மதிக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவுன்சிலிங் பின் அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.