1,149 காவலர் & தீயணைப்பு வீரர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! மார்ச் 4 கடைசி நாள்!
தமிழகத்தில் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 4 ஆகும்.
முழு விவரம்:
காவல்துறை என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.கொரோனா பெருந்தொற்று காரணத்தால் எந்த வேலைவாய்ப்பு அறிவிப்பும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. இப்போது நிலைமை சீரடைந்து வருவதால் வேலைவாய்ப்பு அறிவிப்பு எப்போது வரும் என தேர்வர்கள் ஆர்வமாக உள்ளனர்.
TNUSRB காவலர் தேர்வில் இனி தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த வகையில் தேர்வர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, தற்போது காவல்துறையில் இருந்து ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வகையில் கொரோனா தாக்கத்தின் போது இரவு, பகல் பாராமல், பொதுமக்களின் பாதுகாப்புக்காக பணியாற்றியவர்கள் காவல்துறையினர். காவல்துறையினர், மருத்துவர்களை தொடர்ந்து முன்கள பணியாளர்களாக செயல்படுகின்றனர். இந்நிலையில் காவல் துறையில் அதிக காவலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், காவல்துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அர்ஜுன் டெண்டுல்கரை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி – ரசிகர்கள் விமர்சனம்!
அந்த வகையில் தமிழகத்தில், 1,149 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு https://cisfrectt.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அரசு வேலைக்கு தயாராகும் தேர்வர்களுக்கான பிரத்தியோகமான வாய்ப்பு. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.