அர்ஜுன் டெண்டுல்கரை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி – ரசிகர்கள் விமர்சனம்!
2022 ஆண்டுக்கு IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு IPL யில் போட்டியிடும் 10 அணிகளும் இம்மாதம் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ரசிகர்கள் விமர்சனம்:
இந்திய கிரிக்கெட் வாரியம் BCCI பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கும் IPL மெகா ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இரண்டு நாள் மெகா ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த 1,214 வீரர்களில் 590 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் 370 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 220 சர்வதேச நட்சத்திரங்கள் உரிமையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிகர் தவான், டேவிட் வார்னர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போகும் 10 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் 2 வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
இந்நிலையில் மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த ஆண்டு, ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்டார், ஆனால் அர்ஜுன் பிளேயிங் 11யில் இடம்பெறவில்லை . மேலும் காயம் காரணமாக கடந்த சீசனில் இறுதியில் வெளியேறினார் . 22 வயதான அவர் இந்த ஆண்டுக்கான IPL வீரர் ஏலத்திற்கும் தனது பெயரை பதிவு செய்திருந்தார். மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்றாலும், 590 பட்டியலிடப்பட்ட வீரர்களில் அவரது பெயர் இருந்தது ரசிகர்ளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்த விராட் கோஹ்லியின் RCB அணி – ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
அர்ஜுன் டெண்டுல்கர் தனது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணிக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ட்விட்டர் கணக்கில் மும்பை அணி தக்க வைத்துள்ள பட்டியலில் அர்ஜுனின் பெயரைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை ‘நெபோடிசம் தயாரிப்பு’ என்று ட்விட்டரில் கமெண்ட் செய்தனர். மேலும் பலர் மும்பை இந்தியன்ஸின் அதிகாரப்பூர்வ வாட்டர் பாய் என்று கூறினார். இதனை தொடர்ந்து இம்முறையும் அர்ஜுனுக்கு மும்பை அணி பிளேயிங் 11 யில் வாய்ப்பு கிட்டாது என்று தெரிய வருகிறது.