TNUSRB காவலர் தேர்வில் இனி தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதி தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
காவலர் பணி:
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத் துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டிற்கான TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது. தேர்வுகள் குறித்த அறிவிப்பும் மாற்றங்களும் கொண்டு வரப்பட்டது. அதன்படி TNPSC தேர்வு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்படும் வாகனம் GPS மூலம் கண்காணிக்கப்படும். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்கள் தனியாக பிரிக்கப்படும்.
அர்ஜுன் டெண்டுல்கரை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி – ரசிகர்கள் விமர்சனம்!
தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது முதல் 75 நாட்கள் முடிந்த பிறகு தேர்வுகள் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கியுள்ளது. தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அப்போது மட்டுமே உங்களின் அடுத்த பாடப்பகுதி விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழித் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
மீண்டும் பிப்.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள்! மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் மற்ற தேர்வுகளை தொடர்ந்து காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ்மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதி தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் 40% மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும். 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்றும் தமிழ் தகுதி தேர்வில் வெற்றி பெறுவோரின் OMR விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.