தமிழக பள்ளி & கல்லூரிகளில் 10,371 ஆசிரியர் பணியிடங்கள் – அரசின் முக்கிய முடிவு!
தமிழகத்தில் உள்ள 10,371 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்விற்கான தேதி குறித்தான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்னிக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் நிரப்பப்பட்டு வருகின்றன. அதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்தே ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் தான் தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி, இந்தாண்டு 10371 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், 10371 ஆசிரியர் பணியிடங்களில் 2404 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன மற்றும் மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில் விரிவுரையாளர்கள் 155 காலிப் பணியிடங்களும், 1874 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உள்ளன. மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 493 விரிவுரையாளர்கள் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 97 உதவி பேராசிரியர் பணியிடங்களும் உள்ளன. இந்த அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற இருப்பதால் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து, ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதன் பின்னர், வெகு நாட்களாகவே ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது என்பது குறித்தான அறிவிப்பை மட்டும் ஆசிரியர் தகுதி வாரியம் வெளியிடாமலே இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.