தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் 100% தள்ளுபடி – அமைச்சர் ஹாப்பி நியூஸ்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் 100% தள்ளுபடி - அமைச்சர் ஹாப்பி நியூஸ்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் 100% தள்ளுபடி - அமைச்சர் ஹாப்பி நியூஸ்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் 100% தள்ளுபடி – அமைச்சர் ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் பெற்ற நகைக்கடன்கள் அனைத்தும் 100% தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் அளித்துள்ளார். இதனால் 14 லட்சம் பயனாளிகள் பயனடைய உள்ளனர்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் பெற்ற நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், இந்த நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான மொத்த செலவையும் அரசே ஏற்க இருப்பதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவில் குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவு – இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் அறிவிப்பு!

இதனால் இந்த அறிவிப்பு எப்போது நிறைவேற்றப்படும் என பொது மக்கள் மற்றும் எதிர்கட்சியினரும் கேள்வி கேட்க துவங்கியுள்ளனர். அதற்கு, கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இது தவிர, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பலர் குறுக்கு வழியில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன்களை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால், இது குறித்த தீவிர ஆய்வில் இறங்கிய அரசாங்கம் தகுதியானவர்களுக்கு மட்டும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய இருப்பதாக தெரிவித்தது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தமிழக கூட்டுறவுத்துறை வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு 100% கடன் தள்ளுபடி செய்யப்படும். அந்த வகையில் இதுவரை சுமார் 14 லட்சத்து 40,000 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!