இந்தியாவில் குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவு – இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் அறிவிப்பு!
இந்தியாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தற்போது புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து தேர்தல் தொடர்பான அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல்:
நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத்தலைவர் உள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். குடியரசுத்தலைவர் 5 ஆண்டு பதவி வகிப்பார். கடந்த 2017ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். இவரது பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தற்போது குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால், ராஜ்யசபா, லோக்சபா அல்லது சட்டப் பேரவைகளின் நியமன உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. அதேபோல், குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் போட்டியிட முடியாது. இன்றைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவீத வாக்குகளும், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 49% வாக்குகளும் உள்ளன. புதிய குடியரசு தலைவர் வேட்பாளராக யாரை களம் இருக்கலாம் என்று அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றது.
Exams Daily Mobile App Download
மேலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொதுவான வேட்பாளரை அறிவிப்பதா? அல்லது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி சார்பில் தனித்தனி குடியரசு தலைவர் வேட்பாளரை நியமிப்பதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதால், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் தனித்தனி குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.