தீவிரமெடுக்கும் ஜிகா வைரஸ் – 7 பேருக்கு தொற்று உறுதி.. அச்சத்தில் மக்கள்!
கேரளாவில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியர்கள் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸிகா வைரஸ்:
கொரோனா, ஓமைக்ரான், நிபா ஆகிய வைரஸை தொடர்ந்து தற்போது கேரளாவில் ஸிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கொசுக்களில் இருந்து இந்த ஸிகா வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அண்மையில் ஏராளமான டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இப்போது ஸிகா வைரசும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் – முதல்வர் அறிவிப்பு!
இதனையடுத்து கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற ஊழியர்கள் ஏழு பேருக்கு ஸிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.