ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சில காரணங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சத்யா மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் அந்த சீரியலின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி
ரசிகர்கள் இன்று பலரும் சீரியல்களை விரும்பி பார்க்கும் காரணத்தால் தனியார் தொலைக்காட்சிகள் அனைத்தும் மக்கள் விரும்பும் வகையில் புது விதமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதனால் தனியார் தொலைக்காட்சிகள் மத்தியில் டிஆர்பி ரேட்டிங் போட்டி அதிகமாக இருக்கும். இதனை அடுத்து சன், விஜய் தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் குறிப்பிடும்படியான சீரியல்கள் என்றால் சத்யா மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தான்.
இந்த இரண்டு சீரியல்களுமே சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் தான் ஒளிபரப்பாகி வந்தது. இரண்டு சீரியல்களிலும் கதாநாயகிக்கு தான் முக்கியத்துவம் அளிப்பது போல இருக்கும். இது போன்ற வித்தியாசமான கதைகளுடன் இருப்பதால் இந்த சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிலையில் தான் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த இரண்டு சீரியல்களை நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இறுதி எபிசோட் அக்டோபர் 24ம் தேதி ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆயுத பூஜையினை விமர்சையாக கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழு – வைரலாகும் புகைப்படம்!!
இந்த திடீர் அறிவிப்பினால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தற்போது அனைவரும் மகிழ்ச்சி அடையும் படியான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால், இந்த சீரியல்களின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி சீரியல் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ஜீ தமிழ் தொலைக்கட்சியில் வரும் 18ம் தேதி முதல் ‘அன்பே சிவம்’ என்ற புதிய சீரியல் ஒன்றும் ஒளிபரப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.