செழியன் கையை உதறிவிட்டு, கரு கலைந்த சோகத்தில் அம்மா வீட்டிற்கு செல்லும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியின் குழந்தை கலைந்ததற்கு பாட்டி ஜெனி மீது கோவமாக இருக்கிறார். உடனே ஜெனி செழியன் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சொல்கிறார். ஜெனியின் அம்மா, அப்பா வந்து ஜெனியை அவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி குழந்தை கலைந்த சோகத்தை நினைத்து வருத்தத்தில் இருக்க, பாக்கியா மற்றும் குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்கள். உடனே செழியனும் ஜெனியும் சாப்பிட வர பாட்டி ஜெனியிடம் பேசாமல் இருக்கிறார். உடனே ஜெனி ஏன் என்னிடம் பேசாமல் இருக்கீங்க என கேட்க, பாட்டி ஒன்றும் பேசாமல் இருக்கிறார். உடனே பாக்கியா அத்தைக்கு உன் மீது கோவமாக இல்லை என சொல்ல, ஜெனியை சாப்பிட சொல்கிறார்.
ஆயுத பூஜையினை விமர்சையாக கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழு – வைரலாகும் புகைப்படம்!!
உடனே பாட்டி பாக்கியாவை, எல்லாம் உன்னால் தான் வந்தது என சொல்லி பாக்கியாவை திட்டுகிறார். உடனே ஜெனி பாக்கியாவை ஏன் திட்டுகிறீங்க என சொல்லி பாட்டியிடம் சத்தம் போடுகிறார். உடனே பாக்கியா தான் எல்லாத்துக்கும் காரணம் என பாட்டி சத்தம் போட ஜெனி நாங்க தான் குழந்தை வேண்டாம் என இருந்தோம் அப்போ அதுவே நடந்து விட்டது என சொல்கிறார். உடனே ஜெனி சாப்பிடாமல் எழுந்து செல்ல, பாக்கியாவிடம் ஜெனி என்ன சொல்கிறார் என கேட்கிறார் பாட்டி.
பின் ஜெனி மாடிக்கு சென்று செழியனிடம் சண்டை போடுகிறார். உன்னால் தான் எல்லாம் பிரச்சனை என செழியன் சொல்ல என்ன செய்வது என தெரியாமல் செழியன் இருக்கிறார். அப்போது பாக்கியா வந்து அதை பார்த்து ஜெனிக்கு ஆறுதல் சொல்கிறார். பின் கோபி செழியனுக்கு ஆறுதல் சொல்ல, அந்த நேரம் பார்த்து ஜெனியின் அம்மா அப்பா வருகிறார். அவர்கள் ஜெனிக்கு என்னாச்சு என கேட்க, அனைவரும் உண்மையை சொல்கின்றனர். வேலைக்கு போக வேண்டாம் என ஜெனி எத்தனை தடவை சொன்னேன் என ஜெனியின் அப்பா சொல்கிறார்.
வெண்பாவை மிரட்ட பேயாக மாறிய கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட்!
ஜெனியின் அம்மா, அப்பா நீ கர்ப்பமாக இருக்கிறாய் என எவ்வளவோ சந்தோசமாக இருந்தோம் எதனால் இப்படி நடந்தது என கேட்கிறார்கள். பாக்கியா தெரியவில்லை என சொல்ல, ஜெனியின் அம்மா அப்பா அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்ல இருப்பதாக சொல்கிறார்கள். உடனே ஜெனி சரி என சொல்லிவிட்டு கிளம்ப செழியன் போக வேண்டாம் என சொல்லி தடுக்கிறார். ஆனால் ஜெனி செழியன் கையை உதறிவிட்டு கிளம்புகிறார். அதை பார்த்து பாக்கியா அமைதியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.