வெண்பாவை மிரட்ட பேயாக மாறிய கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடில் கண்ணம்மாவின் செயலை நினைத்து கொண்டே படுக்கைக்கு செல்லும் வெண்பாவிடம் கண்ணம்மா பேயாக வந்து அவரை அடித்து துவைப்பது போல புதிய எபிசோடு ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
பல்வேறு கட்ட திருப்பங்களுக்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கிய கதைக்களத்துடன் பயணித்து வருகிறது. குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் திருப்புமுனையாக கருதப்படும் குழந்தைகள் பற்றிய ரகசியமும் சமீபத்தில் வெளியானது. இப்போது கண்ணம்மாவிடம் ஹேமாவை ஒப்படைப்பதாக கூறி சௌந்தர்யா 4 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால் இதற்கு பாரதி சம்மதிப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு அடுத்து ஹேமா தன்னுடன் இணைய இருப்பதை நினைத்து சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார் கண்ணம்மா.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் அண்ணிக்கு பிறந்த ஆண் குழந்தை – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
அதனால் பூஜை அறையில் சாமிக்கு விளக்கு வைத்து ஹேமாவை தன்னிடமிருந்து பிரித்து வைக்க வேண்டாம் என வேண்டுதல் வைக்கிறார். மறுபக்கத்தில் கார்டனில் அமர்ந்திருக்கும் சௌந்தர்யாவிடம் வரும் பாரதி, சௌந்தர்யா தன்னை வளர்த்த விதம் பற்றியும், சௌந்தர்யா பாரதியிடம் இப்போது நடந்து கொள்ளும் விதம் பற்றியும் நெகிழ்ச்சியாக கூருகிறார். பிறகு கண்ணம்மா எதற்கு வந்தாள் என்றும், ஹேமாவை கண்ணம்மா எதற்கு கொஞ்சினார் என்றும் சௌந்தர்யா கையில் ஏற்பட்ட காயம் குறித்தும் கேள்வி கேட்கிறார்.
இந்த கேள்வியால் விக்கித்து நிற்கும் சௌந்தர்யாவிடம் ஹேமாவை தன்னிடம் இருந்து பிரிக்க நினைத்தால் தான் உயிரோடு இருக்க மாட்டேன் எனவும் கூறி பாரதி அதிர்ச்சியடைய வைக்கிறார். அவரது வீட்டில் வைத்து உறங்க செல்லும் வெண்பாவிடம், தனது குழந்தையை கேட்டு பேயாக வரும் கண்ணம்மா அவரை வெளுத்து வாங்குவது போல தோன்றுகிறது. பிறகு விடிந்ததும் கண்ணம்மா, லட்சுமியை அழைத்து கொண்டு கோவிலுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய நாளுக்கான எபிசோடு முடிவடைகிறது.