‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் அண்ணிக்கு பிறந்த ஆண் குழந்தை – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தனத்தின் பிரசவ காட்சிகள் இன்றைய நாளுக்கான எபிசோடுகளில் வெளியாக இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கிட்டத்தட்ட 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. குடும்ப பாங்கான கதையை உள்ளடக்கிய இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எப்போதும் மக்களின் மனம் கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் சண்டை, பிரிவு, இழப்பு போன்ற அனைத்து காட்சிகளையும் கடந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த தனத்தின் பிரசவ காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்காக பல தியாகங்களை புரிந்த தனத்துக்கு குழந்தை பிறப்பது, அந்த குடும்பத்துக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தான்.
ஜீ தமிழ் சேனலில் ‘அன்பே சிவம்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பு – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் குழந்தை பெற்றுக்கொள்ள பிரசவ வலியால் துடிக்கும் தனத்தை கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பிறகு குடும்பத்தினர் ஒவ்வொருவருக்காக தகவல் சொல்ல அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சேருகின்றனர். அங்கு தனத்துக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த விஷயத்தை கேட்டதும் எல்லாரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பதை போல புத்தம் புதிய எபிசோடு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.