ஜீ தமிழ் சேனலில் ‘அன்பே சிவம்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பு – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ‘அன்பே சிவம்’ என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக இருக்கும் இந்த சீரியலை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.
புதிய சீரியல்
ரசிகர்கள் தற்போது சீரியல்கள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தான் அதிகமாக விரும்பி பார்க்கின்றனர். அந்த நிலையில், விஜய் தொலைக்கட்சி மற்றும் சன் தொலைக்காட்சி இரண்டுமே போட்டி போட்டு கொண்டு ரசிகர்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இரண்டு சேனல்களுக்கு இதற்கான போட்டி கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில், முன்னணி சீரியல்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் தற்போது புதிய சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
ஜீ தமிழ் நடிகை சசிகலா நாகராஜனுக்கு வளைகாப்பு – வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்!
அந்த வகையில் தற்போது புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பட இருக்கிறது. ‘அன்பே சிவம்’ என்று பெயர்வைக்கப்பட்டுள்ள அந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் ஸ்ரீ நடிக்கிறார். அதே போல கதாநாயகியாக நடிகை ரக்ஷா நடிக்கிறார். சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த சீரியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த சீரியலின் ப்ரோமோவில் ஆரம்பத்திலேயே கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்கும் விவாகரத்து ஆகுவது போல காட்டப்படுகிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ : ராஜு மீது பாவனியின் அடுக்கடுக்கான புகார்கள் – கவனிப்பாரா பிக் பாஸ்?
தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மத்தியில் இந்த சீரியல் சற்று வித்தியாசமானதாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சீரியலை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.