பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், வீட்டில் அனைவரும் வெளியே செல்ல தனத்திற்கு பிரசவ வலி வருகிறது. உடனே கண்ணன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அவருக்கு அங்கே ஆண் குழந்தை பிறக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் காலையில் சீக்கிரமாக கடைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். தனம் வீட்டில் முல்லை கடைக்கு சாப்பாடு கொண்டு செல்ல, தனத்தின் அம்மா வீட்டில் யாருமே இல்லை. உனக்கு எப்போ வேணாலும் வலி வரும் ஆனால் இப்படி தனியா விட்டு செண்டிருக்கின்றனர் என சொல்கிறார். அதான் நீ இருக்க தான அப்பறம் என்ன என தனம் சொல்ல, மூர்த்திக்கு போன் செய்ய சொல்கிறார் தனத்தின் அம்மா. அவர் போன் செய்யும் போது வலி வந்தது போல நடிக்கிறார்.
உடனே தனத்தின் அம்மா பதறி போக தனம் நடித்ததாக சொல்லி சிரிக்கிறார். அப்போது தனத்திற்கு உண்மையாக வலி வர தனத்தின் அம்மா நம்பாமல் இருக்கிறார். உடனே தனம் ரொம்ப வலிக்கிறது என அழ, தனத்தின் அம்மா பதட்டப்பட்டு போன் செய்கிறார். ஆனால் யாருமே போன் எடுக்காமல் இருக்க தனத்தின் அண்ணனிற்கு போன் செய்கிறார். ஆனால் அவர் போன் எடுக்காமல் இருக்க, தனத்தின் அம்மா வெளியே சென்று ஆட்டோ கூட்டி வருகிறேன் என சொல்கிறார்.
வெளியே வந்தால் வண்டி எதுவும் வராமல் இருக்கிறது. அப்போது கண்ணன் ஐஸ்வர்யா வீட்டை மூடிவிட்டு வெளியே வர, கண்ணனை பார்த்து அழைக்கிறார். கண்ணன் என்னாச்சு அத்தை என கேட்க, தனத்திற்கு பிரசவ வலி வந்துள்ளது என சொல்கிறார். கண்ணன் உள்ளே சென்று தனத்திற்கு சமாதானம் சொல்ல வெளியே சென்று ஆட்டோ கூட்டிக் கொண்டு வர செல்கின்றனர். அப்போது கண்ணன் ஆட்டோ ஒன்றை பார்க்க இன்னைக்கு பந்த் ஆட்டோ எதுவும் ஓடாது என சொல்கிறார்.
உடனே பிரசவ வலி வந்துவிட்டது என சொல்ல, அவர் வருகிறார். கண்ணன் தனத்தை தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற்றுகிறார். பின் மருத்துவமனைக்கு செல்ல டாக்டர் இன்னும் 1மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என சொல்கிறார். தனம் பிரசவ வலியில் இருக்க, ஐஸ்வர்யா வீட்டு வாசலில் நிற்கிறார். அப்போது ஜீவா மீனா வர தனத்திற்கு வலி வந்ததை ஐஸ்வர்யா சொல்கிறார். பின் கதிருக்கு கண்ணன் போன் செய்து விஷயத்தை சொல்ல, கதிர் மூர்த்தியை அழைத்து கொண்டு வருகிறேன் என சொல்கிறார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா!
ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு நடந்து வர அந்த வழியே முல்லை வண்டியில் வருகிறார். ஐஸ்வர்யா அவருடன் வண்டியில் ஏறி வருகிறார். பின் மூர்த்தி வர தனம் பிரசவ வலியால் கத்திக் கொண்டு இருக்கிறார். மூர்த்தி உள்ளே சென்று பார்க்க, இன்னும் சில நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என தனத்தின் அம்மா சொல்கிறார். அனைவரும் பதட்டத்துடன் இருக்க தனத்திற்கு குழந்தை பிறக்கும் சத்தம் கேட்கிறது. உடனே நர்ஸ் வெளியே வந்து சத்திய மூர்த்தி யாரு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.