1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு நவ.8 இல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் ஆலோசனை!
புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை அரசின் முயற்சியாலும், மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. அதனால் புதுச்சேரி மக்கள் மீண்டும் கொரோனா பேரிடரில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கலந்தாலோசிக்கபட்டது. அதன் பிறகு தமிழகத்தை போலவே புதுவையிலும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் விரைவில் பணி நியமனம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால் பள்ளிகள் திறப்பில் தமிழக முறையையே பின்பற்றி வருகின்றனர். தமிழகத்தில் 1 – 8 வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – CEO முக்கிய அறிவிப்பு!
இந்த ஆலோசனையில் பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நவம்பர் முதல் வாரத்தில் புதுச்சேரி விடுதலை நாள் மற்றும் கல்லறை திருநாள், தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வரவுள்ளதால் அதற்கு விடுமுறை அளிக்க வேண்டி வரும். மேலும் பண்டிகை தினங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவே நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.