தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – CEO முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - CEO முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - CEO முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – CEO முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 3, 5, 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு தேசிய அடைவு ஆய்வு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

NAS தேர்வு:

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 3, 5, 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் தேசிய அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய தேர்வு மாணவர்களின் கல்வித் திறனை அறிந்து கொள்ளும் விதமாக நடத்தப்படுகிறது. மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு கடைசியாக கடந்த 2018 – 2019 ம் கல்வி ஆண்டில் நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் வகுப்பு தொடரப்பட்டதால் தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டில் தேசிய அடைவு ஆய்வு தேர்வு நடத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் சரிவு – இன்றைய நிலவரம்!

இத்தேர்வில் 60 கேள்விகள் கேட்கப்பட்டு 2 மணி நேரம் நடைபெறும். 3 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சூழ்நிலையியல் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், கணிதம், அறிவியல் சூழ்நிலையியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதனை தொடர்ந்து தேர்வின் முடிவுகள் கிரேடு முறையில் மதிப்பீடு செய்யப்படும். தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவத்தேர்வு கால அட்டவணை!

அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை நவ-1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை திருப்பூர் மாவட்டம் 2021-2022 க்கான தேசிய அடைவு ஆய்வு தேர்வு நவம்பர் 12ம் தேதி நடத்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி அளிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!