திடீரென நிறுத்தப்பட்ட ஜீ தமிழ் & விஜய் டிவி சீரியல்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சின்னத்திரையில் இரண்டு முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியல்கள் திடீரென நிறுத்தப்பட இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த சீரியல்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரியல்கள் நிறுத்தம்:
தமிழ் சினிமாவை விட சீரியல்கள் பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். காரணம் படங்களில் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும். ஆனால் சீரியலில் அப்படி இல்லை. தினமும் பல திருப்பங்கள் வெளியாகி வருவதால் பல சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். அதை சாதகமாக பயன்படுத்தி பல தொலைக்காட்சிகளில் புதிது புதிதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு சீரியல்கள் TRPயில் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலிக்கு பிறந்த ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!
இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் ப்ரைம் நேரம் இல்லாத இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன் படி ஜீ தமிழில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நீ தானே என் பொன் வசந்தம் சீரியல் தற்போது முடிய இருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. அதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜ பார்வை சீரியலும் முடிய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருக்கிறது.
கண்ணனுடன் மீண்டும் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் இது உறுதியான தகவல் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ பார்வை சீரியலில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த ராஷ்மி ஜெயராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹீரோவாக முன்னா நடிக்கிறார். 2019 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இரண்டு சீரியல்களும் அதற்குள் நிறுத்தப்பட இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.