அக்னிபாத் திட்டம் 2022: ராணுவத்தில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் வெளியீடு!
இந்தியாவில் ராணுவப் பணிக்கான அக்னிபாத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அக்னிபாத்:
இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்யும் வகையில் அக்னிபாத் எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் மொத்தம் 45,000 பேருக்கு வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரமும் 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இது தவிர பணி காலத்தில் வீர மரணமடைந்தால் 1 கோடி ரூபாயும், விபத்தால் ஊனமுற்றால் அதன் தீவிரத்தை பொறுத்து தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது 60க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஆனாலும் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடுவதாக இல்லை. தற்போது கடற்படையில் சேர விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது – தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரை
இதுவரை 82,000 பெண்கள் உள்பட 9.5 லட்சம் பேர் விண்ணபித்துள்ளது குறிப்பித்தக்கது. அதனை தொடர்ந்து இந்திய விமானப்படையில் 7,50,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்தாக இன்று முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விண்ணப்பபதிவுகள் தொடங்கி உள்ளது. இன்று முதல் (ஆகஸ்ட் 5) செப்டம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தோர் பங்கேற்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.