மாஸ் திட்டத்துடன் மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் நுழையும் ஜனனி – யாரும் எதிர்பார்க்காத எதிர்நீச்சல் ட்விஸ்ட்!
எதிர்நீச்சல் தொடரில் தற்போது தன் புகுந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ள ஜனனி மீண்டும் குணசேகரனின் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளார்.
எதிர்நீச்சல்:
ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் மருமகளாக ஜனனி உள்ளே நுழைகிறார். அப்பொழுது தான் ஜனனிக்கு ஏற்கனவே அங்கிருக்கும் மூன்று மருமகள்கள் அடிமைகளாக நடத்தப்படுவது தெரிகிறது. தன் போராட்ட குணத்தால் அங்கு இருக்கும் பெண்களுக்கு சில நல்லதை ஜனனி செய்தாலும் அந்த வீட்டின் மூத்த அண்ணன் குணசேகரனின் சூழ்ச்சியால் ஜனனி தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த சமயத்தில் சக்திக்கு வேறு ஒரு பொண்ணை பார்க்கும் அளவுக்கு குணசேகரன் சென்று விட்டார். மேலும் கொடைக்கானலில் தற்போது ஜனனி தன் தங்கியுள்ளார். ஜனனி மீண்டும் வீட்டிற்கு செல்லமாட்டாரா என்று நாம் ஏங்கிக்கொண்டிருந்த சமயம் எதிர்நீச்சல் சீரியலின் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதாவது வீட்டை விட்டு வெளியேறியுள்ள ஜனனிக்கு எங்கு நம் லட்சியத்தில் பின் வாங்கி விட்டோமோ என்ற பயம் வருகிறது.
சிறப்பு திருமண பதிவிற்கு கட்டுப்பாடுகள் தளர்வு – உயர்நீதிமன்றம் விதித்துள்ள புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
குறிப்பாக ஆணாதிக்கத்திற்கு பயந்து பெண்கள் பின் வாங்க கூடாது என முடிவு செய்கிறார். இதனால் மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் நுழைய முடிவு செய்கிறார். மேலும் ஜனனி ரோலில் நடிக்கும் மதுமிதா தன் சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை குணசேகரன் வீட்டில் இருந்து வெளியிட்டுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஜனனியின் இந்த ரீஎன்ட்ரி குணசேகரனின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் என்று மட்டும் தெரிகிறது.