சிறப்பு திருமண பதிவிற்கு கட்டுப்பாடுகள் தளர்வு – உயர்நீதிமன்றம் விதித்துள்ள புதிய உத்தரவு!
தமிழகத்தில் திருமண பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
திருமண பதிவு:
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரம் பதிவு , திருமண பதிவு முதலியன செய்யப்பட்டு வருகிறது.அவரவர்களின் மத வழியின்படி திருமணங்கள் நடந்த ஆதாரத்தை காண்பிப்பதன் மூலம் திருமண பதிவு செய்யப்பட்டு வந்தது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மணமக்களில் ஒருவர் இந்தியராகவும், மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால், விண்ணப்பங்களை சார் பதிவாளர்கள் நிராகரித்து வந்த நிலையில் அந்த திருமணத்தை நடத்தி வைக்கவும், அதை பதிவு செய்யவும் தடையேதும் இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஜாதி, மதம் கடந்து திருமணம் செய்பவர்களுக்காக சிறப்பு திருமண பதிவு சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சிறப்பு திருமண பதிவு சட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பது கட்டாயமானதாகும். சரியான காரணங்கள் இல்லாமல் விண்ணப்பங்களை சார் – பதிவாளர்கள் நிராகரிக்க கூடாது என்றும் இதுகுறித்து புகார்கள் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.