அரசு பள்ளி மாணவர்களுக்கான “சிற்பி” திட்டம் – உலக சாதனை சான்றிதழ் பெற்று அசத்தல்!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட சிற்பி திட்டத்தின் கீழ் 5,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை பாராட்டி UNR உலக சாதனைகளுக்கான சான்றிதழை வழங்கியுள்ளது.
‘சிற்பி’ திட்டம் :
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சிற்பி எனும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை தொடங்கியது.
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன் பறக்க தடை – காவல்துறை அதிரடி உத்தரவு!
இத்திட்டத்தின் வாயிலாக சிறந்த மாணவர்களை தேர்வு செய்து கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (பிப்.19) 5,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழும்பூரில் இருந்து ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உடற்பயிற்சியகத்திற்கு ரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
இதனை பாராட்டி World Union Records அமைப்பு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த சான்றிதழை இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் வழங்கினார்.