தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன் பறக்க தடை – காவல்துறை அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் 'இந்த' மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன் பறக்க தடை - காவல்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 'இந்த' மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன் பறக்க தடை - காவல்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன் பறக்க தடை – காவல்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பல நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவல்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ட்ரோன் பறக்க தடை

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக புறப்பட உள்ளார். இதையடுத்து நாளை மறுநாள் மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.

கோடை காலத்தை முன்னிட்டு சென்னையில் விமான சேவை அதிகரிப்பு – இனி கொண்டாடட்டம் தான்!

இதை தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்ய வருகை புரிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாளை மற்றும் நாளை மறுநாள் திருவாரூர் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை என காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!