சென்னையில் நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!

0
சென்னையில் நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!
சென்னையில் நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!
சென்னையில் நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – போக்குவரத்தில் முக்கிய மாற்றம்!

சென்னையில் நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கியுள்ள நிலையில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் மோதிக் கொள்ள இருக்கின்றனர்.மேலும், இந்த கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் நேரில் கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால், மைதானப் பகுதிகளில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இரண்டு கட்ட சோதனை நடத்தப்பட்ட பிறகே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், அதே மைதானத்தில் அக்டோபர் 13,18, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சேப்பாக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு – 5% DA அதிகரிப்பு!

அதாவது, நண்பகல் 12:00 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சேப்பாக்கம் பகுதிகளில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்படும் எனவும், பாரதி சாலை முதல் பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து இன்று சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும், வாலாஜா சாலை முதல் பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்க மாட்டாது எனவும், கண்ணகி சிலை பகுதியில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்லாது எனவும், இந்த பேருந்துகள் அனைத்தும் ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று இலக்கை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பாரதி சாலையின் ரத்னா கபே சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பாரதி சாலை முதல் பெல்ஸ் சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை செல்லும். அதேபோல, பாரதி சாலை முதல் பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்லாது. இதைப்போல, வாலாஜா சாலை மற்றும் காமராஜர் சாலை பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைகளுக்கு செல்ல அனுமதிக்க முடியாது.

Follow our Twitter Page for More Latest News Updates

அடுத்ததாக, மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சில பகுதியில் இருந்து வாகனங்கள் பெல்ஸ் பகுதிக்கு அனுமதிக்க மாட்டாது. ஏற்கனவே, கிரிக்கெட் ரசிகர்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே மைதான வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் எனவும், அனுமதி அட்டை இல்லாத கிரிக்கெட் ரசிகர்கள் மெரினா கடற்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!