வாரத்தில் 4 நாட்கள், தினசரி 8 மணிநேரம் வேலை – புதிய தொழிலாளர் சட்டத்தின் அம்சங்கள்!
இந்திய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடப்பு ஆண்டு முதல் புதிய தொழிலாளர் திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, பணியாளரின் அடிப்படை சம்பளம், வேலை நேரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெற உள்ளது.
புதிய விதிகள்:
இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அண்மையில் 3% அகவிலைப்படியை உயர்த்தியது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 34% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஊழியர்களின் வெகு நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி வலியுறுத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தொழிலாளர்களுகான புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் கர்ப்பமான தனம் – ரசிகர்கள் உற்சாகம்!
புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் நிறுவனங்கள் ஊழியர்களை ஐந்து நாட்களுக்கு பதிலாக நான்கு நாட்கள் வேலை படியாக இருக்கும். மேலும் மூன்று நாட்கள் வார விடுமுறை கிடைக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை நேரம் குறைக்கப்படாது என்பதால், ஊழியர்கள் எட்டு மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய நிலை ஏற்படும். புதிய விதிகளின்படி, பணியாளரின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும்.
அதே வேளையில், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, வீட்டு சம்பளம் குறையும். புதிய வரைவு விதிகளின்படி, பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் பணமும், பணிக்கொடைத் தொகையும் இதில் அதிகரிக்கும்.மேற்கண்ட விதிகள் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அனைத்து மாநிலங்களும் இதை ஒரே நேரத்தில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.