விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் கர்ப்பமான தனம் – ரசிகர்கள் உற்சாகம்!
முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா, முல்லை கர்ப்பமுறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இரண்டாவது முறையாக தனம் கர்ப்பமாவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திலிருந்து முல்லைக்கு மருத்துவர்கள் செயற்கை முறை சிகிச்சையை தொடங்க உள்ளனர். முல்லைக்கு இந்த செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா, முல்லை கர்ப்பமுறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் முல்லைக்கு சிகிச்சை கொடுத்து கர்ப்பமுற செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!
ஆனால், செயற்கை முறை கருவுறுதலுக்கு குறைந்தது 5 லட்சம் செலவாகும் எனவும் மருத்துவர் கூறுகிறார். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது என குடும்பத்தில் உள்ள அனைவரும் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூர்த்தி ஒரு ஐடியா கூறுகிறார். அதாவது தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்திவிட்டு முல்லைக்கு மருத்துவம் செய்யலாம். மருத்துவம் முடிந்த பிறகு மீண்டும் வீடு கட்டும் பிளானை தொடங்கலாம் என கூறுகிறார். ஆனாலும் மீனா, அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை முல்லைக்காக மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சண்டை போடுகிறார். இதற்கு பிறகு எப்படியோ மூர்த்தியும், ஜீவாவும் சேர்ந்து 5 லட்சம் பணத்தை ரெடி செய்கிறார்கள்.
ExamsDaily Mobile App Download
ஆனால், இந்த செயற்கை முறை சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்குமா என்பது சந்தேகமே என மருத்துவர் கூறுகிறார். ஒருவேளை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். இதனால் இந்த சிகிச்சை வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது தனம் மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாவது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.