பெண்கள் பல்கலையில் படிக்க இனி அனுமதி இல்லை..அத்துமீறும் அநீதிகள் – ஆட்டிபடைக்கும் தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தாலிபான்கள், இனி பெண்கள் பல்கலை கல்லூரிகளில் படிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். தாலிபான்களின் இந்த அறிவிப்பு பெண்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அத்துமீறும் தாலிபான்கள்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக தாலிபான்களின் ஆட்சி தான் நடந்து வந்தது. மிகவும் கொடுமையான வகையில் உள்ள தாலிபான்களின் ஆட்சியை எதிர்த்து அமெரிக்கா மக்களாட்சி அமைக்க போரிட்டு வந்தது. இதனால் அமெரிக்கா உதவியோடு அங்கு பிரதமர் நியமிக்கப்பட்டார். ஆனால் தாலிபான்கள் ஆட்சியை எதிர்த்து போரிட்டு வந்த அமெரிக்கா ஒரு கட்டத்தில் பின்வாங்க தொடங்கியது. இதனால், தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறினார். தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வசிக்க விருப்பம் இல்லாத லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் ஆட்சி பொறுப்பிற்கு வந்த தாலிபான்கள் முன்னர் போல் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல், அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டு தான் ஆட்சி நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உயர்வை கண்ட தங்கத்தின் விலை – இனி நகை வாங்குவது எட்டாக்கனி தான்!
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் இனி பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதி இல்லை என்றும், அறிவிப்பு வரும் வரை பெண்கள் பல்கலைக்கு வர கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் கல்வி கனவோடு இருக்கும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் நிலை கேள்வி குறியாகி உள்ளது. இதைப்போலவே, அலுவலகத்தில் பணி புரிந்து வந்த பெண்களையும் வேலையில் இருந்து தாலிபான்கள் நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.