Wipro, Infosys, TCS நிறுவன ஊழியர்கள் கொடுத்த அதிர்ச்சி – மீண்டும் ராஜினாமா? சம்பள குறைவு எதிரொலி!
சமீப நாட்களாக தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் விப்ரோ, இன்போசிஸ் ஆகிய முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வேரியபிள் பே தொகையைக் குறைத்துள்ளது. இந்த முடிவால் ஐடி ஊழியர்கள் மீண்டும் தனது வேலையை ராஜினாமா, செய்யத் தொடங்கியுள்ளனர்.
Wipro , Infosys , TCS:
ஐடி துறையில் தொழிலாளர்கள் தாமே முன்வந்து தமது பணியை ராஜினாமா செய்யும் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு, பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். நோய்த்தொற்று விகிதம் குறைந்து இயல்பு நிலை திரும்பினாலும் ஐ.டி தொழிலாளர்கள் அலுவலகம் திரும்புவது இன்றும் பெரும்பாலான நிறுவனங்களில் நடக்கவில்லை. இந்நிலையில் வேரியபிள் பே குறைப்பு என்பது புதிய வேலைவாய்ப்புகளைத் தேட காத்திருக்கும் ஐடி ஊழியர்களை வேகப்படுத்தி உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
அதாவது விப்ரோ நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்துவதாகவும், புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30% பிடிக்கப்பட்ட பின்பு 70 % வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. விப்ரோ இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக மார்ஜின் மீதான அழுத்தம் மற்றும் அதன் ஊழியர்களின் திறன் வெளிப்பாட்டில் மந்த நிலை, தொழில்நுட்பத்தில் முதலீடுகளில் லாபம் அளவு சரிவு ஆகியவற்றின் காரணமாக வேரியபிள் பே தொகையை கட் செய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – கல்வித்துறை அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், ஜூன் காலாண்டுக்கான ஊழியர்களின் சராசரி வேரியபிள் பே ஊதியத்தை 70 சதவீதமாகக் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐடி நிறுவனங்கள் 10 லட்சம் 20 லட்சம் எனப் பெரிய தொகையைச் சம்பளமாகக் கொடுத்தாலும் இதில் பெரும் தொகையை வேரியபிள் பே- ஆகக் கொடுக்கிறது. மேலும் வேரியபிள் பே பிரிவில் இருக்கும் 2 லட்சமோ அல்லது 4 லட்சமோ அதை 4 காலாண்டுகளுக்கு ஊழியரின் செயல்திறன் அடிப்படையில் அளிக்கப்படும். இந்தத் தொகையைத் தான் தற்போது இன்போசிஸ் குறைத்துள்ளது. இந்த வகையில் TCS நிறுவனங்கள் சில ஊழியர்களுக்குக் காலாண்டு வேரியபிள் பே தொகை ஒரு மாத தாமதத்திற்குப் பின் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் யாருக்கும் வேரியபிள் பே தொகை கட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்