Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி & விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!
விப்ரோ நிறுவனத்தில் காலியாக இருக்கும் கணக்கு நிர்வாகி, வங்கி மற்றும் நிதி சேவை பிரிவு உள்ளிட்ட சில பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி, விண்ணப்ப விவரங்கள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
IT வேலைவாய்ப்பு
ஹைதராபாத்தை முதன்மை தளமாகக் கொண்டு செயல்படும் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, விப்ரோ நிறுவனத்தில் காலியாக இருக்கும் கணக்கு நிர்வாகி, வங்கி மற்றும் நிதி சேவைகள் பதவியில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த பதவிகளுக்கான தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறை குறித்த விவரங்களை இப்போது விரிவாக பார்க்கலாம். மேலும், இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதால் விண்ணப்பங்களை கூடிய விரைவில் செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்ப பதிவு முறை:
- விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.wipro.com/
opportunities/jobs/2617212? lang=en-us&previousLocale=en- US இணைப்பை திறக்கவும். - அதில் இருக்கும் விண்ணப்பிக்கவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- புதிய இணையப் பக்கம் திறக்கும்.
- இப்போது அதில் மெயில் ஐடி மூலம் பதிவு செய்து, விண்ணப்பத்தை தவறு இல்லாமல் நிரப்பவும்.
- வழிமுறைகளை முழுமையாகப் படித்து விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
ஜூலை 1 முதல் வங்கி டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்வு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இதற்கிடையில், விப்ரோ நிறுவனம் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை முன்முயற்சி திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பணியில் குறிப்பிட்ட இடைவெளியை கொண்ட பெண் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் அல்லது அதற்கும் அதிகமான காலம் பணியில் இருந்து ஓய்வு எடுத்த பெண்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வு, தாய்மை, முதியோர் பராமரிப்பு, பயணம், பொழுதுபோக்கு அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்களால் ஏற்படும் தொழில் இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வேலை வாய்ப்பை வழங்க இந்நிறுவனம் பிகின் அகைன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.