ஜூலை 1 முதல் வங்கி டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்வு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வரும் ஜூலை 1 முதல் அனைத்து டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை 10 பிபிஎஸ் உயர்த்துவதாக கர்நாடகா வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட கட்டணங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
வட்டி விகிதங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்த பிறகு நாடு முழுவதும் உள்ள சில வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயல்பட்டு வரும் ஷெட்யூல்ட் கமர்ஷியல் வங்கி, கர்நாடகா வங்கி ஆகியவை ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்கள் மற்றும் NRE ரூபாய் டேர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதற்கான கட்டணங்கள் 10 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்த வங்கி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகை மற்றும் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைகளுக்கு 10 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இது குறித்து கர்நாடகா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்துவது, வங்கியின் பல்வேறு கால வைப்புத் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய சில்லறை வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும்’ என்று கூறியுள்ளது. இப்போது இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் பொது மக்களுக்கான, 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான ரூ.2 கோடிக்குக் குறைவான கால வைப்புத்தொகைகளுக்கு 5.25% முதல் ஆண்டுக்கு 5.35% வட்டி விகிதம் இருக்கும். தவிர, 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்திற்கான விகிதம் தற்போதைய 5.40% லிருந்து 5.5% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் கர்நாடகா வங்கியின் 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 3.40%, 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 4.90%, 91 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை 5%, மற்றும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 5.50% வரையுள்ள டெர்ம் டெபாசிட் விகிதங்கள் மாறாமல் இருக்கும்.
தமிழக ரேஷன் கடைகளில் புதிய முறை – முக்கிய கோரிக்கை!
இதற்கிடையில், NRE டெபாசிட்கள் ரூ.2 கோடிக்கு குறைவாக இருந்தால், வட்டி விகிதம் 1 முதல் 2 வருட காலப்பகுதியில் 5.35% ஆகவும், 2 முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் 5.5% ஆகவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள ஒரு ரூபாய் கால வைப்புத்தொகையை முன்கூட்டியே மூடினால், பொருந்தக்கூடிய விகிதத்தில் 1% அபராதம் விதிக்கப்படும். இந்த பொருந்தக்கூடிய விகிதம் என்பது வங்கியில் வைப்புத்தொகை இருந்த காலகட்டத்திற்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் அல்லது ஒப்பந்த விகிதத்தில் எது குறைவோ அதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.