தமிழக ரேஷன் கடைகளில் புதிய முறை – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மலிவு விலை பொருள்கள் சரியான முறையில் பொதுமக்களை சென்றடைவதில்லை என தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சரியாக பொருள் கொடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்,
ரேஷன் கடை புகார்கள்:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்றவை ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்று அரசு பல முயற்சிகளையும் செய்து வருகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் பொருள்கள் சரியாக வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் சோளிங்கர் வட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் ஒரு மாதத்திற்கு 10 நாட்களுக்கு குறைவான நாட்கள் மட்டுமே திறக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் நாட்களிலும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அரசின் வழிகாட்டுதலின் படி ஒரே தவணையில் வழங்குவது இல்லை என குற்றசாட்டு வைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக மாதத்தில் 10, 15 ஆம் தேதிக்கு மேல் தான் அரிசி வழங்கப்படுகிறது மற்ற பொருள்கள் இன்னும் வரவில்லை என சொல்லி பொதுமக்களை திருப்பி அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொருள்களை வாங்க ஒரு மாதத்திற்கு 3, 4 முறை ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும், ஒரே தவணையில் ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.