தமிழகத்தில் மீண்டும் டெங்கு பரவலா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இந்த நிலையில் பருவமழை காலம் வர இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் கொரோனா பரவலால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல அனைத்து துறைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பருவமழை காலம் தொடங்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறையின் உத்தரவு – தகவல் வெளியீடு!
ஆனால் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. சென்னையில் கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளி விவர பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2017ம் ஆண்டு 23,294 பேருக்கு டெங்கு பாதிப்பும், மேலும் 65 பேர் டெங்குவினால் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 4,486 பேருக்கு பாதிப்பும், 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல் 2019ம் ஆண்டு 8,527 பேருக்கு பாதிப்பும், 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு 2,410 பேருக்கு பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 6039 பேர் பாதிப்பும், 8 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3,205 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வர இருக்கும் பருவமழை காலக்கட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.