தமிழக தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறையின் உத்தரவு – தகவல் வெளியீடு!
பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி :
தமிழக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 அன்று பள்ளி வளாகத்திற்குள் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை குறித்து உரிமைக்குரிய பள்ளி தரப்பில் பொறுப்பான பதிலை சொல்லாமல் பெற்றோரை அலைகளித்ததால் பொதுமக்கள் சிலர் பள்ளியை சேதப்படுத்தினர். அந்த சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களது பெற்றோரிடம் உறுதிமொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. அதாவது, பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என குறிப்பிடப்பட்ட படிவத்தை பெற்றோரிடம் கொடுத்து கையெழுத்து வாங்கியதாக புகார் பரவியது. அதை குறித்ததான படிவம் கூட சமூக வலைதளங்களில் அதிக அளவு வைரலாக பகிரப்பட்டது. மேலும், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் சாதி & மதம் இல்லை என சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களா? ஐகோர்ட் புதிய உத்தரவு!
அதில், பள்ளி நேரங்களில் வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்புக்கு நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின் சில தனியார் பள்ளிகள் இதுபோன்ற படிவம் பெறுவதாக புகார் எழுந்திருந்தாலும், பெற்றோர் தரப்பில் இருந்து இது குறித்து எந்த புகாரும் பதிவாகவில்லை. இதனால் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவாக சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் புகார்கள் பெறப்பட்டு விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.