தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பொது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். ஆனால், தற்போது அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊரடங்கு பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அனைவரும் மீண்டும் பயத்தில் உள்ளனர்.
மீண்டும் ஊரடங்கு
தமிழகத்தில் கடந்த இரு வருடங்களாக கொரோனா என்ற நோய் வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் இயல்பு வாழ்வினை வாழ முடியாமல் அவதியுற்றனர் என்று தான் கூற வேண்டும். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டது. தற்போது தான் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனால் தமிழக அரசு கடந்த வாரம் தான் அனைத்து விதமாக ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியது. மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு! மக்கள் அவதி!
இதனை அடுத்து மீண்டும் இரு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் கொரோனாவின் புதிய மாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்படைந்து வருகிறது. சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று ஒரு சில உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் மற்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த வகை நோய் தொற்று இன்னும் கண்டறியபடவில்லை. எனினும் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் இனி பொது பிரிவினருக்கு இட ஒதுக்கீடு? உயர்நீதிமன்ற உத்தரவு!
இது குறித்து தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் மக்களுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் இன்னும் கொரோனா பரவல் முழுவதுமாக குறையவில்லை என்று தான் வேண்டும். அதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.