மருத்துவப் படிப்புகளில் இனி பொது பிரிவினருக்கு இட ஒதுக்கீடு? உயர்நீதிமன்ற உத்தரவு!
தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இட ஒதுக்கீடு
மருத்துவ படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில், முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே 69% இடஒதுக்கீடு இருந்த நிலையில் மீண்டும் 7.5% இடஒதுக்கீடு வழங்கினால் பொது பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும்,இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் குடும்பத்தினர்தான் பயன் பெறுகின்றனர்.
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வாணையம் அறிவிப்பு!
70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பின்தங்கியவர்கள் குறிப்பிட்ட தலைமை நீதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை எனவும், மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வு தகுதி அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் கொண்டு நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்ற காரணத்தால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என தெரிவித்திருந்தார்.அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது என்றும் அதன் அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் புதிய XE வகை வைரஸ் தொற்று பரவல்? மீண்டும் ஊரடங்கு அமல்!
அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது என கருத்து தெரிவித்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். அதே சமயம் இந்த இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்க வேண்டுமா என்பது குறித்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.