தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அரசு தரப்பு விளக்கம்!
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்களும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்த நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 700 – ஐ நெருங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது நான்காம் அலையின் தாக்குதலாக இருக்குமோ என்று அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு 1000 ஐ தாண்டி உள்ளது. தற்போது பரவி வரும் உருமாற்றம் அடைந்த BA 4, BA5 வகை கொரோனா வைரஸ் பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. வேகமாக பரவ கூடிய வீரியமுடையது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தற்போது 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட கூடிய வகையில் மையங்கள் செயல்பட்டு வருகிறது.
Google Maps மூலமாக சுங்கக்கட்டணத்தை தெரிந்து கொள்ளலாமா? முழு விபரம் இதோ!
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பு பணியாக மாநிலம் முழுதும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.