PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 12 தவணைக்கான பணம் எப்போது?

0
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - 12 தவணைக்கான பணம் எப்போது?
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - 12 தவணைக்கான பணம் எப்போது?
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 12 தவணைக்கான பணம் எப்போது?

PM கிசான் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு கடந்த மே 31-ஆம் தேதி தான் 11 ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைத்தது. இந்நிலையில் தற்போது 12 ஆவது தவணைக்கான பணம் எப்போது கிடைக்கும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PM கிசான் திட்டம்:

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியுதவி திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஒரு ஆண்டிற்கு மட்டுமே ரூ.6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரைக்கும் பிரதம மந்திரி கிசான் நிதியுதவி திட்டத்தின் மூலமாக 11 தவணைக்கான பணத்தை விவசாயிகள் பெற்று பயனடைந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

சொந்தமாக பயிரிடக்கூடிய நிலங்களை வைத்திருக்கும் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவியை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் PM கிசான் நிதியுதவியை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், மாதம் 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் பிரதமரின் இந்த நிதியுதவியை பெற விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி – குறைந்த தேர்ச்சி விகிதம்!

கடந்த மே 31-ஆம் தேதி தான் 11 ஆவது தவணைக்கான நிதியுதவியை விவசாயிகள் பெற்றுள்ள நிலையில் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது 12வது தவணைக்கான நிதியுதவி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் pm-kisan திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரியை நேரில் சந்தித்து இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவே பொது சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, https://pmkisan.gov.in/ என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!