CBSE பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? கல்வி வாரியம் விளக்கம்!
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்து கொண்டிருக்கும் வேளையில் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது மற்றும் CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருமே காத்து கொண்டிருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் – தவறான தகவல் பரப்பிய 4 பேர் கைது!
மேலும், CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாமல் கல்லூரியிலும் மாணவர்கள் சேர முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே, ஜூன் 20 ஆம் தேதியில் இருந்தே அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற ஆரம்பித்துவிட்டது. மேலும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே கல்லூரிகளில் அனைத்து இடங்களையும் நிரப்பிவிட கூடாது எனவும், சிபிஎஸ்இ மாணவர்களுக்காக தனியாக கல்லூரிகளில் இடம் ஒதுக்கியிருக்க வேண்டும் என யுஜிசி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இந்த மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான CBSE தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், மாணவர்கள் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான results.cbse.nic.in மற்றும் parikshasangam.cbse.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று தேர்ச்சி மதிப்பெண்கள், அளவுகோல்கள் மற்றும் மதிப்பெண்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.