கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் – தவறான தகவல் பரப்பிய 4 பேர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வாட்ஸ்அப் குழு அமைத்து சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 4 மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ் ஆப் குழு:
தமிழகத்தில் கள்ளகுறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியமூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீ மதி என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை செய்ததில் உடலில் காயங்கள் இருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 5ம் நாளாக பள்ளியில் வன்முறை வெடித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முக்கிய அறிவிப்பு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இதில் பொதுமக்கள் மற்றும் போலீஸ்சாரிடையே நடந்த தள்ளுமுள்ளு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக 320 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்கொலை தொடர்பாக மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து மறு உடற்கூறு ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 4 மாணவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது என்றால் அது தொடர்பாக தேவையற்ற போலி தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது அதிகமாக உள்ளது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக வாட்ஸ் ஆப் மூலம் குழுக்கள் அமைத்து தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டுகின்றனர். அதே போல தான் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்திலும் நடந்து வருகிறது. அதாவது ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து வதந்தியை பரப்பியதாக 4 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்களை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை பணியாக உதவி ஆணையர்கள் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.